Wednesday, January 9, 2013

மூட்டுவலியிருந்து விடுதலை வேண்டுமா?


மூட்டுவலியிருந்து விடுதலை வேண்டுமா?


சுதேசி” 2012-மே-1-15 இதழில் வெளியான சில தகவல்கள், இதோ உங்களுக்காக..... 


இலவங்கப்பட்டையும், தேனும்  நமது நல்வாழ்வுக்கு எவ்வளவு 

உறுதுணையாக இருக்கிறது என்பதை  இதன் மூலம் அறியலாம். 

                                                              இலவங்கப்பட்டை


                                                                      தேன்

                                                  முடக்கு வாதத்திலிருந்து விடுபட...

                              * இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி

                              * தேன் - இரண்டு தேக்கரண்டி

                              இவற்றை ஒரு  டம்ளர் வெந்நீரில் கலந்து,

                             தினமும் காலை, இரவு  குடித்து வர,

                            ஆர்த்ரிரைட்டீஸ் என்கிற முடக்கு வாதத்தால் பாதிக்கப் பட்டு,

                            நடக்க முடியாமல் சிரமப்படுகிறவர்கள் குணம் பெறுவார்கள்.
மூடக்கு வாதம் (மூட்டுவலி) என்பது இரு வகையாகப் பிரிக்கப்படுகிறது. நம் உடலின் எல்லா அசைவுகளும் வாதம் எனும் வாயுவின் ஆற்றலினாலேயே நிகழ்கிறது. மூட்டு நோயில் "ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ்', "ருமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ்' என இரண்டு வகைகள் உண்டு.
 இதில் முக்கியமானது "ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ்' (சரவாங்கி - ரத்த வாத நோய்) ஆகும். மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களில் இது ஒரு மாறுபட்ட தீராத நோயாகும். இந்த நோய் மனிதனின் உள்ளுறுப்புகளிலும், திசுக்களிலும் ஊடுருவி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
 இந்த நோய் தாக்கும் நிலையில், உடலின் எலும்பு சார்ந்த மென் திசுக்களில் அழிவு ஏற்படும். மேலும் எலும்பு மூட்டுகளை அசைக்க முடியாத நிலையை ஏற்படுத்தும். இந்த நோய்க்கான காரணம் இதுவரை முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் உடலின் நோய்த் தடுப்பாற்றல் குறைபாடு இந்த நோய் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
 எந்த வயதில் நோய் தாக்குதல்? பொதுவாக 40 முதல் 50 வயதுக்குள் இந்த நோயின் தாக்கம் ஏற்படுகிறது. ஆனால் தற்கால சூழ்நிலையில் எந்த வயதினருக்கும் இந்த நோய் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
 இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு மூட்டுகளில் வீக்கம், தொடு உஷ்ணம், வலி, உடல் உறுப்புகளை அசைக்க முடியாதது போன்ற தாளாத குறிகுணங்கள் ஏற்பட்டு (குறிப்பாக அதிகாலை நேரங்களில்) நடப்பதற்கும் பிற வேலைகளைச் செய்வதற்கும் சிரமம் ஏற்படும்.
 உடலின் நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் தன் செயல் பிறழ்ந்து போவதால், ஆரோக்கியமான திசுக்களை தற்காப்பு செய்வதற்கு மாறாக இது போன்ற நோய் எதிர்ப்பாற்றல் மாறுபாட்டால் தீய விளைவுகளை உடலில் ஏற்படுத்துகிறது. இதுவே "ருமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ்' எனப்படுகிறது.
 சிகிச்சை என்ன? பொதுவாக, "ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ்' (சரவாங்கி-ரத்த வாத நோய்) வகை மூட்டு நோய்க்கு, ஸ்டீராய்டு மற்றும் ஸ்டீராய்டு அல்லாத வலி நிவாரண மருந்துகளை நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்கின்றனர். இந்த ரசாயன மருந்துகளால் தவிர்க்க முடியாத பக்க விளைவுகளும் ஏற்படும்.
 தற்காலத்தில் பக்க விளைவுகளை ஏற்படுத்தாத மூலிகை மருந்துகள், இயற்கை சார்ந்த மருத்துவ முறைகள் மக்களுக்கு மிகுந்த நன்மை பயக்கின்றன. தாவர வேதிப்பொருள்கள் பெருமளவில் இனங்காணப்பட்டு வருகின்றன. பல மருத்துவர்களால் பாரம்பரிய வைத்திய முறைகள் பின்பற்றப்படுகின்றன.
 பாரம்பரிய மருத்துவ முறைகளில் தயாரிக்கப்பட்ட மருந்துகளில் உள்ள அறிவியல்பூர்வமான உண்மைகளை வெளிக் கொணர்ந்து உருவாக்கியதுதான் தஏமஙஅ (ரூமா) என்ற சரவாங்கி நோய்க்கான மருந்தாகும்.
 தஏமஙஅ (ரூமா) எனப்படும் மூலிகை மருந்தில் அடங்கியுள்ள மருந்துப் பொருள்கள் மிகுந்த மருத்துவக் குணம் வாய்ந்தவை.
 இந்த தாவர வேதிப்பொருள்களை உள்ளடக்கிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் (ரூமா) தஏமஙஅ எனப்படும் கேப்ஸ்யூலானது, சரவாங்கி நோயால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இந்த மருந்தானது "ருமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ்' நோயினால் ஏற்படும் நார்த் திசு அழிவைக் கட்டுப்படுத்தி அவற்றுக்கு புத்துணர்வூட்டி தசை நார்களின் சிதைவையும் கட்டுப்படுத்தி இந்த நோயிலிருந்து விடுபட உதவுகிறது.
 எங்களது தயாரிப்பில் "அல்மா' எனும் நெல்லிக்கனி சாறு வழங்கப்படுகிறது. இதிலுள்ள வைட்டமின் 'இ'யின் அம்சம், முடக்குவாதத்தில் தொற்று நோயின் தாக்கத்தைக் குறைக்கும் ""கொளாஜன்'' (இர்ப்ப்ஹஞ்ங்ய்) எனும் புரதத்தை தயார் செய்ய உதவி செய்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
 மேலும்  விவரங்களுக்கு...
 டாக்டர்  எஸ்.வி.கோபிகா பாம்ஸ்,
 "அல்மா ஹெர்பல்  சென்ட்டர்',
 பழைய எண் 3,  புது எண் 9,
 சிவப்பிரகாசம் சாலை, பாண்டிபஜார்,
 தி.நகர், சென்னை-17.
 செல்: 9884876958, 044-43546873.

No comments:

Post a Comment