Sunday, March 24, 2013

பழங்களின் மருத்துவ குணங்கள்:


1.செவ்வாழைப்பழம்
கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்

2.பச்சை வாழைப்பழம்
குளிர்ச்சியை கொடுக்கும்

3.ரஸ்தாளி வாழைப்பழம்
கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

4.பேயன் வாழைப்பழம்
வெப்பத்தைக் குறைக்கும்

5.கற்பூர வாழைப்பழம்
கண்ணிற்குக் குளிர்ச்சி

6.நேந்திர வாழைப்பழம்
இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்

7.ஆப்பிள் பழம்
வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது

8.நாவல் பழம்
நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்

9.திரட்சை
1. வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2. வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்

10.மஞ்சள் வழைப்பழம்
மலச்சிக்கலைப் போக்கும்

11.மாம்பழம்
மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்

12.கொய்யாப்பழம்
உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புன் இருந்தால் குணப்படுத்தும்.

13.பப்பாளி
மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது.

14.செர்ரி திராட்சை
கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.

சோற்றுக் கற்றாழை 3


சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம் ( பாகம் 2)

March 19, 2013 by: machamuni
சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம்( பாகம் 1 )ஐ படித்துவிட்டு இந்த சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம்( பாகம் 2 ) ஐ தொடரவும்.
இது வரை நாம் வெளியிட்ட பதிவுகளில்  கற்றாழையைப் பற்றிய இந்தப் பதிவை வெளியிடுவதில் மிகப் பெருமை அடைகிறோம் .
aloevora
இந்த மருந்து கலவையில் சேரும் இரண்டாவது பொருளான  சோற்றுக் கற்றாழைக்கே ஒரு தனிப்பதிவு எழுத வேண்டும்.அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மூலிகை இது.
சோற்றுக் கற்றாழை என்றழைக்கப்படும் குமரி ஒரு மகா மூலிகை ஆகும்.இந்தக் குமரியின் படத்தை இம்ப்காப்ஸ் ன் சித்த மருந்து செய்முறைகள் புத்தகத்திலும், ஆயுர்வேத மருந்து செய்முறைகள் புத்தகத்திலும்,யூனானி மருந்து செய்முறைகள் புத்தகத்திலும் முதல் பக்கத்தில் போட்டிருப்பதில் இருந்து இதன் முக்கியத்துவம் உங்களுக்கு புரியும் என்றே நினைக்கிறேன் .
sortuk karttaaLai 1
sortuk karttaaLai 2
sortuk karttaaLai   3
எந்த வைத்திய முறையிலும் கையாளப்படும் அற்புத மூலிகை.இந்த சோற்றுக் கற்றாழை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பொடியாக மாற்றப்பட்டு மீண்டும் நம் நாட்டிற்கே இறக்குமதி செய்யப்பட்டு அல்சருக்கான  அல்லோபதி மாத்திரைகளிலும், சித்த, ஆயுர்வேத, யூனானி மருந்துகளுக்கும் உபயோகிக்கப்படுகின்றன.
சோற்றுக் கற்றாழையை உணவே மருந்தாக தயாரிக்கப்படும் சோற்றுக் கற்றாழைப் பாயசம் செய்யும் முறைகளை இங்கே விவரிக்கிறோம்.
சோற்றுக்கற்றாழையின்
உள்ளே இருக்கும் சதை பாகம் – 2 கப்,
பால் – 2 கப்,
பனங்கருப்பட்டி – தேவைக்கேற்ப,
முந்திரி, திராட்சை – ஒவ்வொன்றும் 10 எண்ணம்,
ஏலக்காய் – 2,
நெய் – 1 டீஸ்பூன்.
சோற்றுக் கற்றாழைப் பாயசம் எப்படிச் செய்வது?
சோற்றுக்கற்றாழையின் இலையைக் கீறினால் உள்ளே சோறு போன்ற வெள்ளையான சதைப்பற்றான பாகத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும் . அதை சிறிய துண்டுகளாக வெட்டி, சுமார் பத்து முறை தண்ணீரில் நன்கு அலசவும். காய்ச்சிய பாலில் அதைச் சேர்த்துக் கொதிக்க விட்டு ஆறவிடவும். பனங்கருப்பட்டியில் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி, வடிகட்டவும்.
பால் – கற்றாழை கலவையில் விட்டு, ஏலப்பொடி சேர்த்துக் கலக்கவும். நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துச் சேர்த்துப் பரிமாறவும். உடல் சூட்டைத் தணிக்கும். வெள்ளைப் படுதலை சரியாக்கும். மகப்பேறு பெறும் வாய்ப்பினை அதிகரித்து, கருப்பை வளர்ச்சிக்கும் உதவும்.கீழ்க் கண்ட பல பிரச்சினைகளை சரியாக்கும்.
உணவே மருந்து மருந்தே உணவு என்ற ரீதியில் கொடுக்கப்பட்ட உணவுக்குறிப்பு இது.
2)சோற்றுக் கற்றாழை:-
சோற்றுக்கற்றாழை குமரி என்றழைக்கப்படுவது ஏனெனில் எந்தக் குமரியையும் காமத்தில் அடக்கும் வல்லமையை இந்தக சோற்றுக் கற்றாழைக்கு உண்டு.விந்து நீக்கம் (சுய இன்பம் செய்வதனாலும், அதீதமான உடலுறவு கொள்வதனாலும்{ஒரு நாளுக்கு பல முறை உடலுறவு கொள்வது }) ஆனதால் ஏற்பட்ட மூலச் சூட்டின் காரணமாகவே மலக்கட்டு ஏற்பட்டு  மூலமும் , பவுத்திரமும் உண்டாகின்றன.ஆனால் இதனால் ஏற்பட்ட  தாது நஷ்டத்தையும் ,அதனால் ஏற்பட்ட சப்த தாதுக்களில் ஏற்பட்ட குறைபாடுகள்,ஆகிய  இவற்றைக் கூண்டோடு தொலைக்கும் வல்லமை உள்ளது இந்த சோற்றுக்கற்றாழை.
அதனால் பல தீய பழக்க வழக்கங்களினால் இழந்த தாது நஷ்டத்தை ஈடு   செய்து உடலை குமரனாக்குவதால் இதற்கு ஈடு இணை எந்த மூலிகையையும் சொல்ல முடியாது.அவ்வளவு சிறப்பு வாய்ந்த மூலிகை.மேலும்  மூட்டு வலிகள், வெட்டையினால் உண்டான கைகால் மூட்டுக்கள் அசையாத தன்மைகள் இவற்றையெல்லாம் யாரும் கற்பனை செய்து பார்க்காத அளவில் தொலைத்து நாசமாக்கும்.
நாம் இந்த வலைத் தளத்தை உங்களுக்கு கொண்டு வருவதில் பெருமை கொள்ள  மருந்துகளில் ஏதேனும் உண்டென்றால் அது இந்த  சோற்றுக்கற்றாழையேதான்.அதென்ன இது அவ்வளவு பெருமை உடையதா?? என்று நீங்கள் கேட்டால்  இதைவிட பெருமை உடையது எமக்குத் தெரிந்த வரை வெறொன்றில்லை!!!!!!!!!
சோற்றுக் கற்றாழை முடி உதிர்வதைத் தடுப்பதோடு, சிறுநீரகம் மற்றும் மண்ணீரல் , கல்லீரல் ஆகியவற்றில் உள்ள விஷங்களை நீக்குகிறது.எயிட்ஸ் ஐயும் குணமாக்கும் வல்லமை உள்ளது.கேன்சர் என்னும் புற்று நோயை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.
பொல்லாமே கங்க பம்பு ழுச்சூலை குஷ்டரச
மல்லார்மத் தம்பகந்த ரங் குன்ம-மெல்லாம்விட்
டேகு மரிக்கு மெரிச்சற் கிரிச்சமு
மாகு மரிக்கு மருண்டு.
நறுங் கற்றாழைக்கு வாத மேகம் , கப கோபம் , கிருமிக் குத்தல் (மூலக் குத்தல் ), பெரு வியாதி ( குஷ்டம் , பால்வினை நோய்கள் ) , மூலம் , உன்மத்தம் , பகந்தரம் , வயிற்று நோய் , தினவுள்ள பித்த கிரிச்சரம் ( அரிப்பும் , பின் கடுப்பும் உள்ள மூத்திரக் கடுப்பு ) ஆகிய வியாதிகள் மருண்டு  ஓடும் என்று பொருள்.மேலும் மது மேகத்தால் ( சர்க்கரை வியாதியில் ) அவதிப்படுபவர்களுக்கு 48 நாட்கள் இந்த சோற்றுக் கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் சதையை மட்டும் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி 7 தடவைக்குக் குறையாமல் தண்ணீரில் கழுவி சீனாக் கற்கண்டோடு கூட்டிச் சாப்பிட மதுமேகம் ஓடியே போகும்.
இந்த சோற்றுக் கற்றாழைச் சோற்றை திரிபலாதிச் சூரணத்துடன் கலந்து கட்டித் தோலாந்தரமாக தொங்கவிட்டு ,அதிலிருந்து வடியும் நீர் குமரிச் செய நீர் என்றழைக்கப்படும்.அது பல மருந்துகள் தயாரிக்க முக்கிய பொருளாகும்.மேலும் அயக்காந்தம், மண்டூரம் முதலியவற்றைச் செந்தூரமாக்குவற்கு இதைவிடச் சிறந்த மூலிகை இல்லை.
சோற்றுக் கற்றாழை இராஜ கருவிகளில் உண்டாகும் பல குறைபாடுகளை நீக்குவதில் இதற்கு இணை இதுதான். அதீத சர்க்கரையா??குறைந்த சர்க்கரையா???உயர் இரத்த அழுத்தமா???குறைந்த இரத்த அழுத்தமா???அதீத உடல் எடையா ???குறைந்த உடல் எடையா??அதிக உடல் எடையா???அதிக கொழுப்பா???குறைந்த உடல் கொழுப்பா???அதீத உடல் எடையா??? குறைந்த உடல் எடையா???அதீத உணர்ச்சிகளால் உடலில் பல தொல்லைகளா????(அல்சர்,ஆஸ்துமா, பைத்தியம், ஹிஸ்டீரியா, அதீத உணர்ச்சி ஆனால் குறி எழும்பாமை, சர்க்கரை வியாதி , இரத்த அழுத்தம் , கை கால்களில் வலிகள், மூட்டு வலிகள், கீழ்முதுகு வலிகள்)ஏன் மதி மயங்கி பைத்தியமாகி உள்ளனரா???அனைத்திற்கும் தீர்வாக இந்த சோற்றுக் கற்றாழை செயல்படும்.

Friday, March 22, 2013

கடவுள் துகள் Higgs Boson



       அண்மையில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த போது ஒரு சுவையான செய்தியைப் படிக்க நேர்ந்தது.
அது “கடவுள் துகள் ” என்ற கண்டுபிடிப்பு பற்றியது. இதை ஆங்கிலத்தில் God’s particle அல்லது Higgs Bosonஎன்று அழைக்கிறார்கள்.
இதைப் பற்றி விரிவாகப் படித்த போது வார்த்தைகளில் சொல்லொணாத பேரின்பம் இதயத்தில் எழுந்தது. அந்தச் செய்தியைப் படிக்கும் போதே என் மனம் திருமூலர் எழுதிய திருமந்திரத்திற்குத் தாவி விட்டது.
ஏன் ? அதற்கு ஒரு பெரிய கதை இருக்கிறது.
இந்த உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களிலும் அல்லது எல்லாத் தனிமங்களிலும் (Elements) இருக்கும் அடிப்படைப் பொருள் அணு. இந்த அணுக்கள் ப்ரோடான், நியுட்ரான், எலேக்ட்ரோன் ஆகியவற்றால் ஆனவை. அவை எதனால் ஆனவை என்று பார்த்தால் க்வார்க்குகள் மற்றும் லெப்டான்கள் போன்ற பல உப அணுக்களால் உருவானவை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த அணுவை நாம் கண்களால் காண முடியாது. கைகளால் தொட முடியாது . இந்த அணுவே நம் உடல், உணவு, உடை, , மரம் , செடி, கொடி, ஜடப்பொருள் என எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. மொத்தத்தில் எல்லா உயர்திணையும், அஃறிணையும் அணுக்களால் ஆனவை தான். தூணிலும் , துரும்பிலும் கூட இருப்பதால் இவற்றைக் கடவுள் மாதிரி என்று கூட சொல்லலாம்.
ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த அணுவுக்கு ஆதாரமாக இன்னொரு அணு இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதி ஒரு சோதனையில் இறங்கினார்கள். இதன் விளைவாக அந்த உப அணுவைக்( அணுவை இயக்கும் அணு) கண்டிபிடிப்பதில் நெருங்கி விட்டதாக விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள் . அந்த முயற்சியின் பயனாக “கடவுள் துகள் “(The God’s Particle) என்ற ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அது என்ன கடவுள் துகள் ?
அந்தத் துகளுக்குள் போவதற்கு முன் நாம் பெரு வெடிப்புக் கொள்கையைப் (BIG BANG THEORY) பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த உலகம் பெரு வெடிப்புக் கொள்கையின் படி தோன்றியது என்று ஒரு பரவலான நம்பிக்கை உண்டு. இதன் படி அண்ட வெளியில் உள்ள பொருட்கள் அனைத்தும் 12 முதல் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய தீப்பிழம்பாக இருந்தன . இன்று அறியப்படுகின்ற அண்டத்திலுள்ள பொருட்கள் அனைத்தும் சில மில்லி மீட்டர்கள் அளவுக்குள் அடங்கியிருந்திருக்கக் கூடும் என்று நம்பப்டுகிறது. இத்தீப்பிழம்பானது அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தால் மிக வேகமாக விரிவடையத் தொடங்கியது . இதுவே பெரு வெடிப்பு (Big-Bang) என்று கூறப்படுகின்றது . ஒவ்வொரு விநாடியும் பல மடங்குகளாக இந்த விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வாயுக்கள் ஆங்காங்கே நட்சத்திரக் கூட்டங்களாக உருவாகியிருக்கக் கூடும் என்றும் அவர்கள் கருதுகின்றனர் . பல பில்லியன் ஆண்டுகள் கழிந்த பின்னும் அண்டம் இன்னும் விரிவடைந்து கொண்டே செல்வதாகவும், இந்தப் பேரண்டத்தில் உள்ள எல்லாமே அணுக்களால், அணுக்கூட்டங்களால் ஆனது என்ற உண்மையையும் மனிதன் கண்டுபிடித்தான்.
இருந்தும் ,விஞ்ஞானம் இதோடு நிற்கவில்லை.இந்த அணுக்களை இயக்குவதற்கு மூல காரணமாக ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்று அது நம்பியது. காரணம், இந்த அணுக்களுக்கு நிறை(நிறை என்பது புவியீர்ப்பு விசையைக் கழித்தது போக வரும் எடை.) எங்கிருந்து கிடைக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராய் இருந்தது . அதாவது , இந்த அணுக்களை ஒன்று சேர்த்து ஒட்டும் பொருள் என்ன என்பது தான் அவர்களுக்கு பிடிபடாமல் இருந்தது. ஏனென்றால் நிறையில்லாமல் அவை ஒன்றையொன்று பிடித்து வைத்துக்கொள்ள முடியாது. அப்படி பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் அங்கு பொருளோ அதாவது மூலக்கூறுகளோ, அணுவோ, மற்ற எதுவுமே இருக்காது. இந்த நிலையில் தான் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி 1960 இல் ஒரு கோட்பாட்டை முன்மொழிந்தார்.
இந்த அணுவுக்கு ஏதோ ஒரு உப அணு இருக்க வேண்டும். அது தான் மற்ற எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கில் இயக்குகிறது என்பது அவருடைய தத்துவம்.எனினும், அதற்கும் முன்னதாக 1924 ஆம் ஆண்டே இதைப் பற்றிப் பேசியவர், நம் இந்தியாவைச் சேர்ந்த சத்யேந்திர போஸ் ஆவார். அப்போது அவர் இதைப்பற்றி, அணுவையும், அணுசக்தியையும் கண்டறிந்த சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு ஒரு ஆய்வறிக்கையை அனுப்பினார். அவர்கள் இருவரும் சேர்ந்து செய்த `ஐன்ஸ்டீன்-போஸ் கண்டென்ஸேட்’ என்ற கண்டுபிடிப்புதான், இப்போது கடவுள் அணுவைக் கண்டுபிடிக்க முனைந்த விஞ்ஞானிகளுக்கு அடிப்படை. ஆதலால் , அதற்கு ஹிக்ஸ் என்ற பெயரையும், போஸ் என்ற பெயரையும் இணைத்து இந்தக் கண்டுபிடிப்புக்கு ஹிக்ஸ் போஸான்(HIGGS BOSON) என்று பெயர் வைத்திருக்கிறார்கள் .
இந்த நுண்ணிய உப அணுவை கண்டுபிடித்தாலே பிரபஞ்ச இரகசியத்தை முழுமையாக அறிய அது வழி வகுக்கும் என்று விஞ்ஞானிகள் நினைத்தாலும் அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று விஞ்ஞானிகள் சிந்தித்து ஒரு சோதனை செய்ய முடிவெடுத்தார்கள்.
பல பில்லியன் டாலர்கள் செலவில் , செர்ன் (CERN) என்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் , பிரான்ஸ்-ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே , 574 அடி ஆழத்தில் 27 கி.மி. நீளம் உள்ள சுரங்கப்பாதையில் Large Hadron Collider ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் ஜோ இன்கண்டேலா என்ற புகழ்பெற்ற அணு வல்லுநர் தலைமையில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது . பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெருவெடிப்பை மறுபடி நடத்திப் பார்ப்பதன் மூலம் இந்த ஒட்டுப்பொருளை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பினர். LHC யில் அதி வேக புரோட்டான்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டனர். ஒரு வினாடியில் லட்சக்கணக்கான மோதல்கள் நிகழ்ந்தபோது இதுவரை பார்த்திராத துகளின் தடயங்கள் காணப்பட்டன . இதனுடைய நிறை (mass) முன்பு விஞ்ஞானிகள் கணித்துச் சொன்ன அதே வரையறைக்குள் இருந்தது. அதனால் இதுதான் ஹிக்ஸ் பாசன் என்பது கிட்டத்தட்ட முடிவாகி இருக்கிறது.இதை அடுத்து அணுவின் உப அணுவை கிட்டத்தட்ட கண்டுபிடித்து விட்டோம் என்று ஜூலை 4ந் தேதி விஞ்ஞானிகள்அறிவித்தார்கள்.
ஆனால், இந்தத் துகளைக் கண்டுபிடிப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எந்த ஒரு கருவியும் இல்லாமலேயே நம் மூதாதையர்கள் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். கேட்பதற்கு பிரமிப்பாக இருக்கிறதல்லவா !! எப்படி ?
நம் சித்தர் பிரான் திருமூலர் இறைவனைப் பற்றி என்ன சொல்கிறார் பாருங்கள்,
“அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே”
கடவுளை, அணுவின் அணுவே என்று பாடுகிறார். அதையே சிவமாகப் பார்க்கிறார். இந்த அணுவின் அணுவை இப்போது தான் விஞ்ஞானிகள் நெருங்கியிருக்கிறார்கள்.
விஞ்ஞானிகள் போஸான் என்று அழைப்பதைத் திருமூலர் ஈச(சா)ன் என்று அழைக்கிறார்.
இந்த ஹிக்க்ஸ் போஸானின் உருவம் என்ன?!! சிவனின் அளவைச் சொன்ன திருமூலர் சிவனின் உருவத்தை சொல்லாமலா இருந்திருப்பார்?
“கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே”
இறைவனை, “அனைத்திலும் கலந்தும் கலக்காமலும் இருப்பவனே, கண்ணுக்குத் தெரியாமல் இருப்பவனே , பரந்த சடையுடையவனே , பசும் பொன்னிறத்தில் இருப்பவனே , நினைப்பவர்கெல்லாம் கிடைக்காதவனே , அனைவரையும் மயக்கும் வெண்ணிலவானவனே” என்கிறார் திருமூலர்.
இதில் சில வரிகளை ஆராய்ந்து பார்ப்போம். பொதுவாகச் சிவபெருமானை நாம் சடாமுடியன், சடையான் என்று கூறுவோம். அதே போல், அவரும் பரந்த சடையுடையவனே என்று கூறியிருக்கிறார். இப்பொழுது உங்கள் கண்கள் முன்னே ஒரு மனிதனை பரந்த சடையுடன் நினைத்துக் கொள்ளுங்கள். நாம் பேச்சு வழக்கில் பரட்டைத்தலை என்று சொல்லுவோம் அல்லவா அதே போன்று சற்று பெரிய அளவில் . பின்பு அந்த உருவம் பொன்னிறத்தில் உள்ளது போல் நினைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் கண் முன்னே நாம் வழக்கமாகக் காணும் சிவபெருமான் பொன்னிறத்தில் சடா முடியுடன் காட்சியளிப்பான். இப்பொழுது திருமூலர் கூறியவாறு அந்த உருவத்தை கண்ணுக்குப் புலப்படாமல் சிறியதாக மாற்றுங்கள். சராசரியாக ஒரு அணு அளவிற்கு..! இப்பொழுது தெரிகிறதா அந்த ஹிக்க்ஸ் போசோன் எப்படி இருக்கும் என்று..?! இணையதளத்தில் உலா வரும் தங்க நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான் ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் என்றால் , அதைக் சிவமாகக் கண்டுவிட்டாரே திருமூலர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே !!!.
“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே”
சிவனுடைய வடிவைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு பசுவின் முடியை எடுத்து அதை நூறாகக் கூறிட்டு, பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்து, பின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறுகிறார் திருமூலர்.
இப்பொழுது நாம் விஞ்ஞானம் சொல்வதைப் பார்ப்போம். ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு
0 .000000212 mm. இப்பொழுது நாம் திருமூலர் பாடலின் படி கணக்கிட்டு பார்போம். ஒரு மனித முடியின் சுற்றளவு 40 -80 மைக்ரோன் (micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்த்தியாகவே இருக்கும். எனவே, அதன் சுற்றளவு 100 மைக்ரோன் என்று வைத்துக்கொள்வோம்
மயிரின் சுற்றளவு = 100 மைக்ரோன்
(size of an hair = 100 micron )
100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்
(100 micron = 0.1 millimeter)
இப்பொழுது திருமூலர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்,
0.1/100 = 0.001 மில்லிமீட்டர் (MM)
அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்,
0.001/1000 = 0.000001 மில்லிமீட்டர் (MM)
இப்பொழுது நமக்குக் கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தால் வகுத்தால் சிவனின் உருவத்தின் அளவைக் காணலாம் என்கிறார் திருமூலர்.
0.000001/4000 = 0.00000000025 மில்லிமீட்டர் (MM),
ஆகவே, இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிப்பிடுவது சராசரியாக 0 .00000000025 மில்லிமீட்டர் (MM).
சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாக் கோடி அண்டங்கள், பேரண்டங்கள், இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு மூலகாரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணுசக்தி . ஒரணுவை ஆயிரம் கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றல் கொண்ட சக்தியையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்றால் பிரிக்க முடியாத அணு என்று பொருள். அந்தப் பரமாணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது. கண்ணுக்குத் தெரியாத அணு எவ்வளவு சக்தி வாய்ந்ததென்பது நமக்குத் தெரியும். அந்த அணுவினை ஆயிரங் கூறிட்டால்தான் பரமாணு என்கிற ஆதிபிரானைக் காணலாம் என்கிறார்கள் சித்தர்கள் . அந்த அற்புதசக்தியின் ஒளி ஆயரங்கோடிச் சூரியர்களுக்கு நேர் என்றும் கூறுகிறார்கள்.
“இருக்கில் இருக்கம் எண்ணிலா கோடி
இருக்கின்ற மூலத்தூர் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரடில் வீச
உருக்கிய ரோமம் ஒளி விடுந்தானே”
இந்தக் கடவுள் துகளானது நம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்கப்பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவை விட பன்மடங்கு சிறியதாக உள்ளது. சரி , அதைவிடச் சிறியதாக என்ன இருக்கமுடியும் என்கிறிர்களா. அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருகிறார்கள் . இப்பொழுது ஹிக்க்ஸ் போஸானில் சொல்வதும் அணு தனியாகச் செயல் படவில்லை. அணுவுக்குள் அணு(பரமாணு) ஒன்று உள்ளது. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை . அறியப்பட்டால் புரியும் நம் தமிழரின் தனித்துவம்.
இது மட்டுமல்ல. கம்பரும் ,
“சாணிலும் உளன்;ஓர் தன்மை, அணுவினைச்
சத கூறு இட்ட கோணிலும் உளன்……”
என்று பாடுகிறார்.
கடவுள் சாணிலும் இருக்கிறார்.அணுவினை நூறு கூறுகளாகப் பிளந்தால், அதற்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்பதே இதற்குப் பொருள்.அப்படி நூறு கூறுகளாகப் பிரிக்கப்பட்ட அணுவுக்கு கோண் என்று பெயர் சூட்டுகிறார் .அணுவைப் பிளக்க முடியும் என்பதை இருபதாம் நூற்றாண்டில் தான் எர்னஸ்ட் ரதர்ஃபோர்ட்(Earnest Rutherford) கண்டுபிடித்தார். ஆனால், அவருக்கு முன்பே கம்பர் அதைச் சொல்லி விட்டாரே !!
இது வெறும் கற்பனை தான் என்றாலும் ரதர்ஃபோர்டின் கண்டுபிடிப்புக்கு முன்னோடி அல்லவா நம் கவிச்சக்கரவர்த்தி !!! மேலும் , திருவள்ளுவமாலை என்னும் நூலில் ஒளவையார் திருக்குறளைப் புகழ்ந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்”.
அதாவது, ஒரு அணுவைத் துளைத்து, அதற்குள் ஏழு கடல்களை நிரப்பினால் அது எப்படி சக்தி வாய்ந்ததாக இருக்குமோ அப்படி இருக்கிறதாம் திருக்குறள்.
அணுவைத் துளைத்தால்(Nuclear Fission) அளவிட முடியாத சக்தி பிறக்கும் என்பது ஒளவையாருக்கு எப்படித் தெரிந்தது ?
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற பழமொழியை இதுகாறும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. இப்போது அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. பொருள் தெரிந்த பின்பு சின்னதாக இருந்தாலும் பிரம்மாண்டமாகத் தெரிகிறது இந்தப் பழமொழி.
இதை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போது நம் முன்னோர்கள் தான் உலகின் முதல் அணுசக்தி விஞ்ஞானிகளோ என்று எண்ணி அவர் தாம் காலடியில் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கத் தோன்றுகிறது.
 வாழ்க தமிழ்மொழி !! வாழ்க தமிழினம் !! வாழிய வாழியவே !!!

தமிழ் சித்தர் கண்ட அணுசக்தி



இரண்டாவது உலகப்போர் காலத்தில் தான் அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் எழுபது ஆண்டு காலமாகத்தான் அணுசக்திக் கொள்கையை உலகம் அறியும். ஆனால் இந்த அணுகுண்டுக் கொள்கையை திருவள்ளுவமாலையில் காணும் போது, அது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. திருக்குறளின் பெருமையை உலகம் அறியும். குறுகிய அடிகளில் (குறள்) மிகப்பெரிய கருத்துகளைப் புகுத்தியது வள்ளுவனின் திறமையாகும். இதை விளக்க வந்த இடைக்காடர் என்ற புலவர் “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்” என்று பாடினார்.

இதையே ‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத்தரித்த குறள்’ என்றார் ஒளவையார். அணுவானாலும் கடுகானாலும் பிளந்து கொண்டே போனால் பிளக்கமுடியாத ஒரு சிறு துகள் (Atom) இருக்கும். அதைப்பிளக்கும் போது பிரமண்டமான சக்தி உண்டாகும்.இதை அணுவியல் படித்தோர் அறிவர்.

அணு என்பதும் பரமாணு என்பதும் இந்திய அறிஞர்கள் கண்ட மிகச் சிறிய துகள். எனவே அணு என்பதை அறிந்தே அவர்கள் “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி” என்று கூறினர். புலவர்கள் என்போர் முக்காலமும் உணர்ந்த ஞானிகள். ஊனக்கண்களால் காணமுடியாதவற்றையும் ஞானக்கண்களால் அறிவர். கையால்தான் ஒரு அணுவைப் பிளந்தால் ஏழு கடல் அளவு சக்தி கிடைக்கும் என்பதைச் சொல்லாமல் சொன்னார்கள் போலும்.

“இடைக்காடர் கூற வந்த விஷயம் வேறு, நீங்கள் அதில் விஞ்ஞான கருத்துகளை வலியப் புகுத்துகிறீர்கள்” என்று சிலர் கூறலாம். ஆனால் திருமூலரின் மற்றொரு பாடலைக் காண்கையில் அவர்களுக்கு நாம் நினைப்பதைவிட அதிகமாகத் தெரியும் என்று தெளிவாகிறது. அதை இறுதியில் காண்போம்.

அணுவைப் பிளப்பதால் வரும் ஆற்றல்(nuclear fission) அணுகுண்டு செய்யப் பயன்படுகிறது. அணுவை இணைப்பதால் (nuclear fission) உருவாகும் ஆற்றல் ஹைட்ரஜன் குண்டு செய்யப் பயன்படுகிறது.

இடைக்காடர் பாடல் அணுகுண்டுக் கொள்கையை நினைவுப்படுத்தும். ஒரு அணுவைத் துளைத்தால் ஏழு கடல் ஆற்றல் கிடைக்கும். பரிபாடல் (3-53), புறநானுறு (2) ஆகிய பாடல்களுக்கு உரை எழுதியோர் “உலகம் அணுக்களால் ஆனது” என்றும் “அணுச் செறிந்த உலகம்” என்றும் எழுதியுள்ளனர். இன்றைய அறிவியலில் நாம் படிக்கும் அணுவும் உரையாசிரியர்கள் கூறிய அணுவும் வேறு வேறாக இருக்கலாம். ஆயினும் மிகச் சிற்¢ய பொருள்/துகள் எனும் கருத்திலேயே அவர்கள் பயன்படுத்தினர்.

ஒரு கடுகில் 2,62,144 அணு!

ஒரு பழந்தமிழ்ப் பாட்டு அணு பற்றிய தமிழர்களின் அறிவை விளக்குகிறது.

8 அணு = ஒரு தேர்த்துகள்
8 தேர்த்துகள் =ஒரு பஞ்சிழை
8பஞ்சிழை = ஒரு மயிர்
8 மயிர் = ஒரு மணல்
8 மணல் = ஒரு கடுகு
8 கடுகு = ஒரு நெல்,
8 நெல் = ஒரு விரல்
12 விரல் = ஒரு சாண்
2 சாண் = ஒரு முழம்
4 முழம் = ஒரு கோல்
500 கோல் = ஒரு கூப்பீடு
4கூப்பீடு = ஒரு காதம்

“அணுத்தேர்த்துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி
மணற்கடுகு நெல் விரலென்றேற-வணுத்தொடங்க
யெட்டோடு மன்னு விரற் பன்னிரண்டார் சாணாக்கி
லச்சாணிரண்டு முழமாம்.”
- செந்தமிழ் தொகுதி 12 P127

70 ஆண்டுகளுக்கு முன்பு அணுகுண்டு வெடித்துச் சோதித்தபோது அந்த அற்புதக் காட்சியைக் கண்டவர்களில் ஒருவர் ஓபன்ஹீமர். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பெரிய அணு விஞ்ஞானி (nuclear physicist) . சோதனைக்காக அணுகுண்டு வெடித்ததை நேரில் கண்டவுடன், அந்த அதிபயங்கரமான காட்சி கண்ணபிரானின் விஸ்வரூபக் காட்சிபோல இருந்தது என்று கூறி பகவத்கீதையில் விஸ்வரூப தரிசன யோகத்திலுள்ள ஸ்லோகத்தை மேற்கோள் காட்டினார்.


திருமூலர் கணக்கு

உலகில் வாழும் உயிர்களின் வடிவத்தை சொல்ல வந்த திருமூலர் ஒரு அதிசயமான விசயத்தைச் சொல்லுகிறார். ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இதுவும் அணுவைப் பிளப்பது போலத்தான். ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறு போடச் சொல்கிறார். இதுதான் ஜீவனின் வடிவம் என்கிறார்.

100 x 1000 x 100 000=100 000 00 000

அதாவது ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இவர்கள் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டார்கள் என்றால் அது மிகையல்ல.

“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே”
-திருமந்திரம்`1974
(சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்)

பதினெண்சித்தர்கள்



 
தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண்சித்தர்கள்) என்று கூறுவர்.[6] அவர்கள் வருமாறு;-
1 திருமூலர் 2 இராமதேவ சித்தர் 3 கும்பமுனி 4 இடைக்காடர் 5 தன்வந்திரி 6 வால்மீகி
7 கமலமுனி 8 போக நாதர் 9 மச்ச முனி 10 கொங்கணர் 11 பதஞ்சலி 12 நந்தி தேவர்
13 போதகுரு 14 பாம்பாட்டி 15 சட்டைமுனி 16 சுந்தரானந்த தேவர் 17 குதம்பைச் சித்தர் 18 கோரக்கர்

Forty Five Monks



தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்..!





 சத்தான உணவைத் தேர்வு செய்து சாப்பிடுவது மட்டுமல்ல அதைச் சாப்பிடும் விதமும் முக்கியம். ஆப்பிள் போன்ற பழங்கள் முதல் கடலை வகைகள் வரை தோலை நீக்கிச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது.

புரதத்துக்காக கால்நடைகளிலிருந்து கிடைக்கும் வெண்ணை, பால், இறைச்சி, பாலாடைக்கட்டி, முட்டை போன்றவற்றை அதிகம் சார்ந்திருக்காமல் இருப்பது நல்லது. தாவர புரதங்களைப் போலில்லாமல் இவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன.

அசிட்டிக் உணவுகளான சர்க்கரை, பால், பால் பொருட்கள், செயற்கைக் குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதும், ஆல்கலைன் உணவு வகைகளான பழங்கள், காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

உங்களால் தினசரி பால் சாப்பிடாமல் இருக்க முடியாது என்றால் சோயா பால் அல்லது பாதாம் பால் சாப்பிடலாம். அதிலும் தற்போது பெரும்பாலும் பால் பொருட்கள் கலப்படமாக வருகின்றன என்று சந்தேகிக்கப்படும் நிலையில் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.

எண்ணையில்லாமல், ஆரோக்கியமான முறையில் சமைப்பதற்குச் சற்றுக் கூடுதல் நேரமாகும். ஆனால் அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாலும் நன்மையே. கட்லட் போன்றவற்றை நிலக்கடலை மாவு போட்டு ரோஸ்ட் செய்யலாம். அதற்கு சற்று கூடுதல் நேரமானாலும், நிலக்கடலையில் இருந்தே போதுமான எண்ணை கிடைத்து விடும்.

பெரும்பாலான உணவுப் பொருட்களில் சத்துக்களும், மணமும் அவற்றின் தோலில்தான் இருக்கிறது. நீங்கள் தோலை உரிக்கும்போது சத்துகள் அதனுடன் போய்விடுகின்றன. நீங்கள் தோலை உரிக்கும்போது அதனுடன் மணத்தையும் அகற்றி விடுகிறீர்கள்.

காய்கறிகள், பழங்கள், தானியங்களை தண்ணீ­ரில் அலசுவது நல்லது தான். ஆனால் அதுவே அதிகமாகி விட வேண்டாம். அப்படிச் செய்தால் அனைத்துச் சத்துகளையும் இழக்க நேரிடும்.

காய்கறிகளை தண்­ணீரில் வேகவைப்பதை விட ஆவியில் அவியுங்கள். அதற்குத் தண்­ணீர் குறைவாகத் தேவைப்படும் என்பதுடன் சத்துகளையும் இழக்காது இருக்கலாம். காய்கறிகளை வெட்டியபிறகும் அலச வேண்டாம்.

உணவுடன் பழங்கள் சாப்பிட வேண்டாம். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது பழங்கள் வேகமாக ஜீரணமாகின்றன. அவை சர்க்கரைத் தன்மையைக் கொண்டுள்ளதால் உங்கள் வயிற்றில் நொதிக்கின்றன. அது பொதுவாக நல்லது தான். ஆனால் நீங்கள் நிறைய உணவு சாப்பிட்டபின் பழங்கள் சாப்பிட்டால் ஜீரணம் மெதுவாக நடைபெறுகிறது.

நீண்ட நேரம் நொதித்தல் நடைபெற்று வாயுப் பிரச்சினை, வயிற்றுப் பொருமல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். சாறாக இல்லாமல் முழுப் பழமாகச் சாப்பிடுவதும் நல்லது. பழச்சாறில் கலோரிகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் பழமாகச் சாப்பிடும் போது அதிக நார்ச்சத்தைப் பெறலாம்.

பனை


 
 புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு.

நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்.

தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.

பணங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.

பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும்.உடல் பலமும் அதிகரிக்கும்.
பதநீர் மகிமை..

பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக
பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி.

சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்'',

சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சறுக்கு பதர்நீர் என்று பெயர்.மேக நோய் இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடாஅது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.

பனை நுங்கு கோடை கலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.

பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்.

பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆரும்.

பயன் தரும் பாகங்கள் . . .

நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.

வளரியல்பு. . . பனை கற்பக மரமாகும். கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும். பனை இந்தியாவில் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர். இதன் வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக வளரும். நூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும். இது தொண்ணூறு அடிக்கு மேல் வளரும். பனங்கை ஓலை 9 -10 அடி நீளம் வரை நீண்டிருக்கும். பக்கவாட்டில் அடுக்கடுக்காக பனங்கை வளர்ந்திருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.


மருத்துவப் பயன்கள். . .

பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.

பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும்.

வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும்.

புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.

நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.

பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.

பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.

பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.

பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.

கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.

அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன் படுத்தினர். பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள்.

பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில் பனைவெல்லம், நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

வெல்லம் அயச்சத்து மிகுந்தது. சோகை நோய்களுக்கு மருந்து. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு.

தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.

உங்களுடைய ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது?



1.இன்ஷூரன்ஸ் பாலிசி!
 

யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின்
நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம்
இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட
வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000
ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப
கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள்
நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம்
அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள்
தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய்
பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும்.
இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போனவிவரங்கள் கேள்வி பதில் வடிவில்
கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.

2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி
மற்றும்கல்லூரி) யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ்,கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை:

விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க
முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை
அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர்
அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

3.ரேஷன் கார்டு! யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை
எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட
வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை:

சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன
விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள்
வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர
வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது
குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

4.டிரைவிங் லைசென்ஸ்! யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை:

விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம்
FIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு
மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும்.

5.பான் கார்டு!யாரை அணுகுவது?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட
ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச்சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள். எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.

நடைமுறை:

பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில்
தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு
விண்ணப்பிக்க வேண்டும்.

6.பங்குச் சந்தை ஆவணம்!
யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல்
அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்?

தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால்,பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை:

முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம்
எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில்
புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

7.கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள். எவ்வளவு கட்டணம்?

ஆவணக் கட்டணம் 100 ரூபாய்.இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20
ரூபாய்.

கால வரையறை:

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

8.டெபிட் கார்டு!யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?

ரூ.100.

கால வரையறை:

வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது
அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை:

டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி
வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல்
தெரிவித்து, அதன் மூலம் மோசடியான
பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி
புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

9 மனைப் பட்டா! யாரை அணுகுவது..?

வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?

ரூ.20.

கால வரையறை:

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர்
பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில்விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

9.பாஸ்போர்ட்! யாரை அணுகுவது..?

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.

கால வரையறை:

இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40
நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக
காலம் எடுக்கும்.

நடைமுறை:

பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல்
துறையில் புகார் அளித்து கண்டு பிடிக்கப்படவில்லைஎன்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக்
ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டபிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

10.கிரெடிட் கார்டு!

கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக
வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.

யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான
விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை:

15 வேலை நாட்கள்.

நடைமுறை :

தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக்கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச்
சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

இன்சுலின் செடி.






இன்சுலின் செடி.

1) மூலிகையின் பெயர் -: இன்சுலின் செடி.

2) தாவரப்பெயர் -: காஸ்டஸ் பிக்டஸ்

3) PLANT FAMILY: Costaceae

4) BOTANICAL NAME: Costus இக்நேஉஸ்
5
) பயன் தரும் பாகம் -: இலை.

6) வளரியல்பு -: இந்தச் செடி வளமான ஈரப் பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக் கூடியது. இந்தத் தாவரம் ஈஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் தாயகம் அமரிக்காவின் புளோரிடா மாகாணம். இது பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் தற்போது இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். கொச்சியிலும் தமிழகத்திலும் கன்னியாகுமரி யிலும் இந்த தாவரத்துக்கான நர்சரிகள் உள்ளன. நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இதை இனப் பெருக்கம் செய்ய 3 கணுவுகளை உடைய முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து விடும். ஆரம்பத்தில் அடிக்கடி தண்ணீர் விட வேண்டும். இதை நான் வீட்டிலும், வரகம்பாடி தோட்டத்திலும் வளர்க்கிறேன். இதன் இலைகள் மா இலை போன்று இருக்கும். ஆனால் இலைகள் அடுக்காக விசிறி போல் சுற்றிக் கொண்டு மேல் நோக்கி வளரும். சுவை சிறிது புளிப்பு கலந்திருக்கும். ஆரம்பத்தில் இதன் நாற்றை கேரளாவிலிருந்து திரு.வின்சென்ட் அவர்கள் ஒரு நாற்று ரூ.50-00 என்று வாங்கி வந்து நாற்றுக்கள் உற்பத்தி செய்கிறார். தற்போதும் அவரிடம் நாற்றுக்கள் உள்ளன. அவரது போன்- 9894066303 0422-2566303.



5) மருத்துவப் பயன்கள் -: சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழிநிலைதற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள். இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். ஆய்வுக் கட்டுரை-Pharmacology Study
தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது.ANTI_Diabetic herb.


பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடைவார்கள். பார்க்க
www.sidhaeureka.blogspot.com

தசநாடிகள் / தச வாயுக்கள்


தசநாடிகளின் சுற்று. 
சூரியகலை - வலது கால் பெருவிரல் முதல் இடது நாசி.
சந்திரகலை - இடது கால் பெருவிரல் முதல் வலது நாசி.
சுழிமுனை - மூலாதரத்தில ஆரம்பித்து எல்லா நாடிகளுக்கு நடு நாடியாகும்.
சிங்குவை - மூலாதரம் தொடங்கி உள் நாக்கிலே நன்று விழுங்கச் செய்வது.
புருடன் - மூலாதரம் தொடங்கி வலது கண் வரை நிற்பது.
காந்தாரி - மூலாதரம் தொடங்கி இடதுகண் வரை நற்பது.
அத்தி - மூலாதரம் தொடங்கி வலது காது வரை நிற்பது.
அலம்புடை - மூலாதரம் தொடங்கி இடது காது வரை நிற்பது.
சங்கினி - மூலாதரம் தொடங்கி குறியின் அளவு நிற்கும்.
குரு - மூலாதரத்திலிருந்து அபானத்தில் நிறுகும்.
          நமது உடலில் 72000 நாடிகள் தசநாடியில் சூரியகலை, சந்திரகலை, சுழிமுனை, முக்கிய நாடிகளாகும் ஆக வாதம் மலத்தில் பித்தம் நீரில் சிலேத்மம் - விந்தில்..
1. இருகண்புருவ மத்தியில் எல்லா நாடிக்கும் ஆதாரமாக உள்ளது சுழிமுனை.
2. இடது மூக்கு துவாரம் வரை - சூரியகலை.
3. வலது மூக்கின் வரை - சந்திரக் கலை.
4. வலது கண்ணின் வரை - புருடன்.
5. இடது கண்ணின் வரை - காந்தாரி.
6. வலது காது வரை - அத்தி.
7. இடது காது வரை - அலம்புடை.
8. மூலாதலத்திலிருந்து - சங்கினி.
9. உள் நாக்கு முடியும் வரை - சிங்குவை.
10. அபான வரை - குரு.

தச வாயுக்களின் சுற்று.

1. உயிர் காற்று. (பிராணன்)
2. மலக்காற்று. (அபானன்)
3. தொழில் காற்று. (வியானன்)
4. ஒலிக்காற்று. (உதானன்)
5. நிரவுக்காற்று.( சமானன்)
6. தும்மல் காற்று. (நாகன்)
7. விழிக்காற்று. (கூர்மன்)
8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்)
9. இமைக் காற்று. (தேவதத்தன்)
10. வீங்கற் காற்று. ( தனசெயன்)

பிராணன் - மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடல், பூச உதவமு குரல்வளையில் உள்ளது. கை,கால்களை வேலை செய்ய பெரு விரல் உள்ளது.
அபானன் - சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும்.குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும்.

வியானன் - தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையாபொருளில் உருப்புக்களைநீட்ட மடக்க உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக்காக்கும்.

உதானன் - உணவின் சாரத்தை கொண்டு செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு.

சமானன் - நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது.

நாகன் - அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தால் துப்புதல் ஆகிய வேலை செய்யும்.

கூர்மன் - மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண்திறந்து மூட, கண்ணீர் வர வேலை செய்யும்.

கிருகரன் - நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டுபண்ணும், பசி வர வைக்கும், செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண.

தேவதத்தன் - சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல்.

தனஞ்செயன் - மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல், இறந்த மூன்றாம் நாள் தலை வழியாகவெழியே செல்லுதல்.

ஆறு ஆதாரத்தின் பங்கு.
1. மூலாதாரம்.
2. சுவாதிட்டானம்.
3. மணிப்பூரகம்.
4. அனாகதம்.
5. விசுத்தி.
6. ஆக்கினை.

(1) மனம் சித்தமாக நெற்றி புருவ மத்தியில் உள்ளது. இதுவே ஆங்ஞை அல்லது ஆக்கினை என்கின்றோம்.
(2) ஆகாய தத்துவத்தில் சக்கரம் விசுத்தி கழுத்தில் உள்ளது.
(3) வாயு தத்துவத்தில் அநாவிரதம் மார்பு பகுதியில் உள்ளது.
(4) அக்கினி தத்துவத்தில் மணிபூரகம் வயிற்று பக்கத்தில் உள்ளது.
(5) நீர் தத்திவத்தில் அவாதித்தனம் குறிபகுதியில் உள்ளது.
(6) பூமிதத்துவத்தில் மூலாதாரம் குத பகுதியில் உள்ளது

Wednesday, March 20, 2013

முகப்பரு, கரும்புள்ளி




காய்ச்சல் பற்றியும் ,அதன் உண்மைகள் பற்றி



THURSDAY, SEPTEMBER 16, 2010

மக்களுக்கு காய்ச்சல் பற்றியும் அதன் உண்மைகள் பற்றியும் விழிப்புணர்வை ஊட்டவும், ஆங்கில மருத்துவம் பற்றிய உண்மைகள் படித்தவர்கள் மத்தியில் கூட விழிப்புணர்வை இல்லாத நிலைபற்றியே இக்கட்டுரை எழுதக் காரணம்.

முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிடுகிறேன்.வைரஸ்களோ, பாக்டீரியாக்களையோ அழித்தொழிப்பது என்பது இயலாத காரியம்.உலகத்தில் அழுக்கை எப்படி ஒரு இடத்தில் இருந்து மற்றோரிடத்திற்கு மாற்ற முடியுமோ அது போலவே கிருமிகளும் ,அவற்றை தள்ளி வைக்க முடியுமே தவிர அழிக்க முடியாது.எனெனில் இவைகளில் கெடுதல் செய்வதாக எண்ணப்படும் கிருமிகளை (கவனிக்கவும் எண்ணப்படும் கிருமிகளே) அழிக்க உபயோகப்படுத்தும் மருந்துகள் நமக்கு நன்மை செய்வதற்காக உடலில் உள்ளகிருமிகளையும் அழித்து ஒழிக்கின்றன்.இது உடலின் சம நிலையை அழிக்கிறது.

பயிர்களில் பூச்சிகளை அழிக்க உபயோகப்படுத்தும் மருந்துகள்,பயிர்களுக்கு நன்மை செய்வதற்காக உள்ள பூச்சிகளையும் ,கிருமிகளையும் அழித்து ,பூச்சிகளின் சமநிலையையும் கெடுத்து,பயிர்களையும் விஷமாக்கி கடைசியில் அதைச் சாப்பிடும் நம் உடலையும் நஞ்சாக்கி நம் உள்ளுறுப்புகளையும் கெடுத்து வருகின்றன.

இது தனியாக ஒரு பக்கம் இருக்கட்டும். உண்மையில் நம் நாட்டு மருத்துவமான சித்த மருத்துவமும் ,அயூர் வேத மருத்துவமும் ஒதுக்கி வைக்கப்பட்டு( அதற்கு மாற்று மருத்துவம் எனப் பெயரிடப்பட்டு) அயல்நாட்டு மருத்துவமான ஆங்கில முறை மருத்துவம் என்ற ஒரு குப்பை மருத்துவத்தை ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்றதாலேயே தலை சிறந்த மருத்துவம் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் நிலை இன்று.

ஆங்கில மருத்துவத்திற்கு என்று ஒரு கொள்கையோ வரைமுறையோ கிடையாது.எடுத்துக்காட்டாக கிருமி நீக்கம் என்ற பெயரில் எல்லா இடத்திலும் பெனாயில் போன்ற கிருமி நீக்கம் செய்யும் நச்சுக்களை எல்லா இடங்களிலும் தெளிக்கிறார்கள்.கிருமி நீக்கம் செய்ய கத்திகள்,ஊசிகள் போன்றவற்றை கொதிக்க வைக்கிறார்கள். ( இப்போது பெனாயில்(PHENOIL) போன்றவை சுற்றுச் சூழலைக் கெடுக்கும் என்று அதே மேற்கத்திய நாடுகளில் உபயோகிக்கப்படுவதில்லை)  

பின் ஏன் அந்த ஊசி போடும் போது அதன் மூலம் நோய் பரவுகிறது என்று ஒரு முறை பயன்படுத்தும் ( DISPOSABLE NEEDLES ) ஊசிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.அந்த ஊசிகளின் மூலம் போடப்படும் மருந்துகள் கேவலம் ஊசிகளின் மூலம் பரவும் கிருமிகளையே கட்டுப்படுத்தவோ கொல்லவோ முடியாதென்றால் அது எப்படி நமக்கு நல்லது செய்யும்.

கிருமி நீக்கம் என்ற பெயரில் ஒரு பக்கம் உடல்நலத்தையும் , சுற்றுச் சூழலையும் கெடுத்து வருவது ஒரு பக்கம் . மற்றொரு பக்கம் தடுப்பூசிகள் என்ற பெயரில் உடலில் கிருமிகளை ஊட்டி வருகின்றன.

முதலில் தடுப்பூசி தத்துவத்தை உங்களுக்கு விளக்குகிறேன்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது உறங்கிக் கொண்டு இருக்கும் சக்தி.கிருமிகள் உடலின் உள்ளே நுழைய முயற்சி செய்யும் போதோ,உள்ளே நுழைந்த கிருமிகளை விரட்டவும் கொல்லவும் செய்யும் இந்தச் சக்தி உடல் நுண் எதிர்மங்களை(ANTI BODIES) உற்பத்தி செய்கின்றன.இந்த உடல் நுண் எதிர்மங்கள்(ANTI BODIES) உள்ளே நுழைந்த கிருமிகளை விரட்டவும் கொல்லவும் செய்யும்.

உடலின் காவல்காரர்களான இந்த உடல் நுண் எதிர்மங்களை (ANTI BODIES) நோய் வரக்கூடாது என்பதற்காக சும்மா தட்டி எழுப்பி வைக்கும் வேலையே தடுப்பூசிகள். அதற்காக வீரியம் குறைக்கப்பட்ட கிருமிகள் உடலில் ஏற்றப்படுகின்றன.போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்ட குழந்தைகளின் மலம்(STOOL), மூத்திரம்(URIN),எச்சில்(SALAIVAA) என்று அனைத்திலும் போலியோ கிருமிகள் மூன்றிலிருந்து நான்கு வாரங்கள் இருக்கும்.

நம் உடலே ஒரு பெரிய மருத்துவர்.அத்தனை அறிவுள்ள உடலுக்கு கேடு வரும்படி நாம் நடந்து கொள்ளும் போது உடல் தன் அதீத சக்தியை பிரயோகிக்கிறது.அதுவே இந்த உடல் நுண் எதிர்மங்களை (ANTI BODIES) உற்பத்தி செய்தல்.இதை சும்மா, சும்மா தட்டி எழுப்பி வைக்கும் வேலை
செய்தால் கடைசியில் ஒரு கட்டத்தில் உடல் தன் அதீத நடவடிக்கையான
உடல் நுண் எதிர்மங்களின் (ANTI BODIES) உற்பத்தியே நடக்காமல் போய்விடும்.

முதலில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்தை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்றார்கள்.பின்னர் BOOSTER DOSE என இரண்டாவது முறையும் கொடுங்கள் என்றார்கள்.பிறகு மூன்று முறை மூன்றாண்டு கால இடைவெளியில் கொடுங்கள் என்றார்கள்.பிறகு நான்கு முறை என்றார்கள்.இப்போது ஐந்து முறையில் வந்து நிற்கிறது.நமக்குதான் இலவசமாகக் கிடைக்கும் எதையும் விடமாட்டோமே!
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளும் குழந்தைக்கு இந்தக் வீரியம் குறைக்கப்பட்ட கிருமிகளைக் கூட,எதிர்த்து உடல் நுண் எதிர்மங்களை (ANTI BODIES)  உண்டாக்குமளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால், எந்த வியாதியைத் தடுப்பதற்குப்பதற்காக இந்த மருந்து ஏற்றப்பட்டதோ, அந்த மருந்து அந்த வியாதியைத் தடுப்பதற்குப் பதில்,அதே வியாதியை உண்டாக்கிவிடும்.

இதை அந்த மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களே தங்கள் மருந்துக் குறிப்புகளில் இதை வெளியிட்டிருக்கின்றன. இது சாதாரணமாக உள்ள எந்த நபர்களுக்கும் தெரியாத ஒன்று.இன்னொரு முக்கிய விஷயம் இலவசமாகத் தரப்படும் எதுவும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களில் பாதுகாப்புத் தராது( அதாவது இலவசமாய்த் தரப்படும் மருந்து சேவையின் பாற்பட்டது ,அதனால் ஏற்படும் பாதிப்புகளை எந்த விதத்திலும் நஷ்ட ஈடோ, வேறு எந்த குறைபாட்டுக்கும்(ஏன் உயிர் போனாலும்) இலவச சேவையின் மூலம் சேவை செய்தவர் பொறுப்போ காரணம் ஆக மாட்டார்கள்( அது அரசு சேவையே ஆனாலும்)).

கீழே சில இணைப்புக்கள் கொடுத்துள்ளேன் பார்வையிடவும்.
http://naayakan.blogspot.com/2010/07/blog-post.html
http://www.yarl.com/forum3/index.php?showtopic=73504
http://www.vinavu.com/2009/09/24/vaccine-privatization/
http://healernews.blogspot.com/2010/05/blog-post_16.html

நமது நண்பர் ஒருவர் தடுப்பூசியின் தீமையை உணர்ந்து தடுப்பூசி போடாத போது அவருக்கு பிறப்புச் சான்றிதழ் கொடுக்க சிக்கல் இருப்பதாகக் கூற அவ்ர் தகவல் உரிமைச் சட்டத்தை நாடி கீழ்க் கண்ட விவரம் பெற்றுள்ளார்.   
Graphic1
சித்த வைத்தியத்தில்,மட்டுமல்ல ஆயுர்வேத வைத்தியத்திலும் காய்ச்சல் என்பது ஒரு வியாதியல்ல என்றே கூறுகின்றன.'ஆசன சீதம் ஜீவன் நாசம்' என்று கூறுகிறது.அதாவது குதப் பகுதி குளிர்ந்தால் உயிர் போய்விடும்.காய்ச்சல் என்பது உயிராற்றலின் கிளர்ந்து எழுதலே!இதை எதிர் உயிரி ரசாயனங்களைக் கொண்டு (ANTI -BIOTIC ) இந்த உயிராற்றலின் கிளர்ந்து எழுதலை கொன்றுவிடுதலே ஆங்கில வைத்திய முறை.(ANTI -BIOTIC ) என்ற பெயரிலேயே உயிர் சக்திக்கு எதிரானது என்ற பொருள் இருக்கிறது.அது கிருமியின் உயிராக இருந்தாலும் சரி நம் உயிராக இருந்தாலும் சரி.இதுவே பின்னர் பெரு வியாதியாக விளைந்து ஆங்கில மருந்துகளால் கட்டுப் படுத்த முடியாதபடி கிளர்ந்து எழுந்து,  உயிராற்றலை எழுப்ப முயற்சி செய்து முடியாதபோது உயிரை முடித்துக் கொள்கிறது.( பால்வினை நோய்கள் AIDS ஆக மாறுவதும்,சாதாரண சளி ஆஸ்துமாவாக மாறுவதும் இப்படியே).

சூப்பர் பக்( SUPER BUG ) என்ற கிருமி இந்தியாவில் இருந்து போனதாகவும்.இந்தியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் இருந்து பன்றிக் காய்ச்சல்{( SWAIN FLUE )(H 1- N 1 VIRUS)}  ,பறவைக் காய்ச்சல்{( Avian Flu ) ,OR, ( BIRD FLU )}Fபரவியதாகவும் கூறும் மேலை நாட்டினருக்கு இந்த உண்மை தெரியாதா?
காய்ச்சலா? தலைவலியா? உடனே பாராசிட்டமால்( PARACETAMOL ) எடுங்கள்.போடுங்கள்,குழந்தைகளுக்கும்( PEDIATRIC DROPS  ) சொட்டு மருந்தாகவும், கொடுங்கள் என்று கூறுகிறார்களே! நாமும் நமது நண்பர் தலைவலி என்றவுடன் போடு ஒரு பாராசிட்டமால் என்கிறோமே.

 அது என்ன என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருப்போமா?பாரா அசிட்டோ அமினோ பினைல் என்பதே பாராசிட்டமால். நம் வயிறு என்ன குப்பைத் தொட்டியா? பெரும்பாலான ஆங்கில முறை மருத்துகள் பெட்ரோலில் இருந்து எடுக்கப்படும் ( CRUDE  OIL PETROLEUM BI PRODUCTS ) உப பொருட்களே!அதிகமான எதிர் உயிரி ரசாயனங்களைக் கொண்டு (ANTI -BIOTIC )வைத்தியம் புரிதலே இந்த சூப்பர் பக்( SUPER BUG ) கிருமி பரவலுக்கு முக்கிய காரணம் என்று இப்போது புலம்பி என்ன பயன்!

கீழே கொடுத்திருக்கும் இணைப்புகளைப் பார்வையிடுங்கள்.புரியும்.அதன் கடைசி இணைப்பில் கொடுத்திருக்கும் விஷயத்தையே இணைப்பாக கொடுத்திருக்கிறேன்.பாராசிட்டமாலின் கொடுமை கண்ட பின்னும் உபயோகித்தால்.



இஇக்கமமஅக்க்க்க்u







MY HUSBAND WAS WORKING IN A HOSPITAL AS AN IT ENGINEER, AS THE HOSPITAL IS PLANNING TO SET UP A DATABASE OF ITS PATIENT. AND HE KNOWS SOME OF THE DOCTOR QUITE WELL. THE DOCTORS USED TO TELL HIM THAT WHENEVER THEY HAVE A HEADACHE, THEY ARE NOT WILLING TO TAKE P****** PARACETAMOL.

IN FACT, THEY WILL TURN HERBAL MEDICINE OR FIND OTHER ALTERNATIVES.THIS IS BECAUSE P****** PARACETAMOL IS TOXIC TO THE BODY, AND IT HARMS THE LIVER.ACCORDING TO THE DOCTOR, P****** PARACETAMOL WILL RESIDE IN THE BODY FOR AT LEAST 5 YEARS. AND ACCORDING TO THE DOCTOR, THERE USED TO BE AN INCIDENT WHERE AN AIR STEWARDESS CONSUMES A LOT OF P****** PARACETAMOL DURING HER MENSTRUAL AS SHE NEEDS TO STAND ALL THE TIME. SHE'S NOW IN HER EARLY 30'S, AND SHE NEEDS TO WASH HER KIDNEY (DIALYSIS) EVERY MONTH.

AS SAID BY THE DOCTOR THAT WHENEVER WE HAVE A HEADACHE, THAT'S BECAUSE IT IS DUE TO THE ELECTRON / ION IMBALANCE IN THE BRAIN. AS AN ALTERNATIVE SOLUTION TO COPE WITH THIS MATTER, THEY SUGGESTED THAT WE BUY 1 OR 2 CANS OF ISOTONIC DRINK (E.G.100PLUS), AND MIX IT WITH DRINKING WATER ACCORDING TO A RATIO OF 1:1 OR 1:2 (SIMPLY, IT MEANS ONE CUP 100PLUS, ONE CUP WATER OR 2 CUPS WATER).MY HUSBAND AND I HAVE TRIED THIS ON SEVERAL OCCASIONS, AND IT SEEMS TO WORK WELL.

ANOTHER METHOD WILL BE TO SUBMERGE YOUR FEET IN A BASIN OF WARM WATER SO THAT IT BRINGS THE BLOOD PRESSURE DOWN FROM YOUR THROBBING HEAD.

AS P****** PARACETAMOL IS A PAIN KILLER, THE MORE P****** PARACETAMOL YOU TAKE, THE LESSER WOULD BE YOUR THRESHOLD FOR PAIN (YOUR ENDURANCE LEVEL FOR PAIN). WE ALL WILL FALL ILL AS WE AGED, FOR WOMAN, WE WOULD NEED TO GO THROUGH CHILDBIRTH. IMAGINE THAT WE HAD SPENT OUR ENTIRE LIFE POPPING QUITE A SUBSTANTIAL AMOUNT OF P****** PARACETAMOL (PAIN KILLER) WHEN YOU NEED TO HAVE A SURGERY OROPERATION, YOU WILL NEED A MUCH MORE AMOUNT OF GENERAL. IF YOU HAVE A VERY HIGH INTAKE OF P****** PARACETAMOL THROUGHOUT YOUR LIFE (MIGRAINE, MENSTRUAL CRAMPS ) IT IS VERY LIKELY THAT NORMAL GENERAL ANESTHETIC WILL HAVE NO EFFECTS ON YOU AS YOUR BODY IS PUMPED FULL WITH P****** PARACETAMOL AND YOUR BODY IS SO USED TO PAIN KILLER THAT YOU WOULD NEED A MUCH STRONGER PAIN KILLER, MORPHINE????








THE THOUGHT IS SCARY ENOUGH TO TURN ME TO HERBAL MEDICINE OR OTHER HEALTHIER ALTERNATIVE. VALUE YOUR HEALTH, VALUE YOUR LIFE, THINK TWICE BEFORE YOU EASILY POP THAT FAMILIAR PILL INTO YOUR MOUTH AGAIN.

PLEASE DON'T ALWAYS TAKE P****** PARACETAMOL AND TRY SEND THIS TO PEOPLE YOU CARE ABOUT. 






I THINK PARACETAMOL HAS HAD IT'S TOLL ON ME TOO. WHEN I WAS A TEEN TAKING ONE PARACETAMOL TABLET WAS ENOUGH TO STOP A COLD OR A BAD HEADACHE BUT NOW I NEED TWO! 

ACTUALLY FOR MOST OCCASIONS WE TAKE PARACETAMOL, WE DON'T REALLY NEED TO. FOR EXAMPLE LIKE THE HEADACHES YOU GET SOMETIMES AFTER A LONG JOURNEY OR TRAFFIC JAM IN A HOT DAY ETC. I'VE NOTICED THEY JUST GO AWAY IF I CAN FORGET THEM.

பன்றிக் காய்ச்சல்{( SWAIN FLUE )(H 1- N 1 VIRUS)}  ,பறவைக் காய்ச்சல்{( AVIAN FLU ) ,OR, ( BIRD FLU )}காய்ச்சலின் அறிகுறிகள்


உடல் சூடாதல், உடல் பலவீனம், வலி,தொண்டை ப் புண், இருமல், கண் வருத்தம் (Fever, Muscle weakness AND pain in Muscle , Sore throat and cough, Sore in eyes - conjunctivitis )()H5N1 தீ நுண்மத்தால் 







இறப்பை ஏற்படுத்தும் காரணிகள்

கடுமையான வைரஸ் நியூமோனியா, சுவாச அழுத்தம், பல அங்கங்கள் செயலிழப்பு (Severe viral pneumonia, Respiratory distress syndrome, Multi- organ failure)



கடைசியாக முத்தாய்ப்பாக ஒரு செய்தி மதிப்பிற்குரிய ஐயா ஜட்ஜ் பலராமையா அவர்கள் எழுதி உள்ள புற்று நோயை குணமாக்கலாம் என்ற புத்தகத்தில் நூறு பாராசிட்டமால் ( PARACETAMOL ) எடுத்துக் கொண்டால் புற்று நோய் வரும் காரணிகள் உறுதிப்படும், என்றும் பல நாடுகளில் பாராசிட்டமால்( PARACETAMOL ) தடை செய்யப்பட்டுள்ளதையும்,அந்த நாடுகளின் பட்டியலையும் விவரிக்கிறார்.
மேலே உள்ள இரண்டு வலைப் பூக்களையும் பாருங்கள்.இந்த காய்ச்சலைப் போக்கிக் கொள்ள சித்த வைத்தியத்தில் எளிமையான மருந்துகள் உள்ளன.அதை விடுத்து இது போன்ற கல்லீரலையும் , மண்ணீரலையும் , சிறுநீரகத்தையும் கெடுக்கும் மருந்துகளை ஏன் உண்டு, குழந்தைகளுக்கும் கொடுத்து ,எதிர் கால சந்ததிகளையும்,அவர்கள் உடல் நலத்தையும் எதிர் காலத்தையும் கெடுக்க வேண்டும்.
இப்படிக்கு
உங்கள்
அன்புள்ள நண்பன்
சாமீ அழகப்பன்