Wednesday, January 9, 2013

நல்வாழ்வுக்கான தகவல்கள்-1





சுதேசி” 2012-மே-1-15 இதழில் வெளியான சில தகவல்கள், இதோ உங்களுக்காக.....


இலவங்கப்பட்டையும், தேனும்  நமது நல்வாழ்வுக்கு எவ்வளவு 

உறுதுணையாக இருக்கிறது என்பதை  இதன் மூலம் அறியலாம். 

                                                              இலவங்கப்பட்டை


                                                                      தேன்

                                           இதயத்தை பாதுகாக்க....

                             * இலவங்கப்பட்டை பொடி- ஒரு தேக்கரண்டி
                           
                              * தேன் - இரண்டு தேக்கரண்டி
                           
                                  இவ்விரண்டையும் கலந்து,

                                 தினமும் காலையில் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வந்தால்,

                     இதய நோய் தாக்குதலில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.


                                                  முடக்கு வாதத்திலிருந்து விடுபட...

                              * இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி

                              * தேன் - இரண்டு தேக்கரண்டி

                              இவற்றை ஒரு  டம்ளர் வெந்நீரில் கலந்து,

                             தினமும் காலை, இரவு  குடித்து வர,

                            ஆர்த்ரிரைட்டீஸ் என்கிற முடக்கு வாதத்தால் பாதிக்கப் பட்டு,

                            நடக்க முடியாமல் சிரமப்படுகிறவர்கள் குணம் பெறுவார்கள்.


                                     சிறுநீர்குழாய் கிருமித் தொல்லையை இல்லாமலாக்க...

                              * இலவங்கப்பட்டைப் பொடி - இரண்டு தேக்கரண்டி

                              * தேன் - ஒரு தேக்கரண்டி

                              மேற்குறிப்பிட்டவைகளை,
                     
                            இளஞ்சூடான வெந்நீரில் கலந்து குடித்துவர,

                          சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும்.

                         கோடைக்காலத்தில் இது அருமருந்தாகும்.


                                          கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த... 

                               *  இலவங்கப்பட்டைப் பொடி - ஒரு தேக்கரண்டி

                               *  தேன் - இரண்டு தேக்கரண்டி

                                    இவ்விரண்டையும்,  மிதமான வெந்நீரில்  கலந்து,

                                  ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்து வர,

                                  கொலஸ்ட்ரால் குறையும்.


                                   ஜலதோஷத்திலிருந்து விடுதலையாக...
                                                   
                              * இலவங்கப்பட்டைப் பொடி - கால் தேக்கரண்டி

                              * தேன் - ஒரு தேக்கரண்டி

                              சூடான தண்ணீரில் கலந்து  மூன்று நாட்கள் குடிக்க,

                              சைனஸ், சளி, இருமல் அனைத்தும் தீரும்.

                              நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.


                                                   வயிற்று உபாதைகளை போக்கிக் கொள்ள...

                                  * இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி

                                   * தேன் - இரண்டு தேக்கரண்டி
                 
                                    இவ்விரண்டையும் கலந்து உண்டு வர,

                                  வயிற்றுவலி, அல்சர்  குணமாகும்.

                                   வாயுத்தொல்லை மறையும்.


                                        அஜீரணம் சரியாக...

                                      * இலவங்கப்பட்டைப் பொடி-  கால் தேக்கரண்டி.

                                       * தேன் - இரண்டு தேக்கரண்டி கலந்து,
                                         
                                         உணவுக்கு முன் சாப்பிட,

                                      உண்ணும் உணவு சுலபமாக சீரணமாகும்.

             சாப்பிட்டவுடன் வயிறு பெருத்து சிரமப்படுகிறவர்களுக்கு நலம் தரும்.


                                             நீண்ட ஆயுளுக்கு.....

                                       * இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி

                                        * தேன் - நான்கு தேக்கரண்டி

                 மூன்று கோப்பை மிதமான சூட்டிலுள்ள தண்ணீரில் கலந்து அதை,

                ஒரு நாளில் மூன்று அல்லது இரண்டு முறையாக பருகி வர,

               வயதான தோற்றம் மறைந்து, இளமை ததும்பும்.

                சருமம் மிருதுவாகும். ஆயுள் நீடிக்கும்.

நன்றி: சுதேசி - 2012- மே. 1-15.
                                

No comments:

Post a Comment