Monday, February 18, 2013

நெல்லிக்காய்


ஐந்து நெல்லிக்காயை எடுத்து சாறு பிழிந்து அதே அளவு எலுமிச்சம்பழம் சாறு கலந்து 2 ஸ்பூன் தேன் விட்டு அரை குவளை சுடுநீர் கலந்து காலையில் பருகினால் நோய்கள் அண்டாது. பித்தம், கிறுகிறுப்பு, மயக்கம், பைத்தியம், மனத்தடுமாற்றம் சோகை இவற்றிற்கு நெல்லிச்சாறு அருமருந்து. குடல் வலுவடைய வேண்டுமா? ஒரு அவுன்சு நெல்லிச்சாறுடன் அரை அவுன்சு தேன் கலந்து காலையில் சாப்பிட்டால் ஜீரணசக்தி அற்புதமாக விளங்கும். விடாத விக்கல் நிற்க வேண்டுமா? நெல்லிச்சாறுடன் கொஞ்சம் அரிசி, திப்பிலிப்பொடியைக் கலந்து உண்ணுங்கள். எஃகு நரம்பு வேண்டுமா? ஒரு கரண்டி நெல்லிச்சாறுடன் பசு நெய் சேர்த்து காலையில் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். இளமை குன்றாதிருக்க தேனில் நெல்லிக்கனியை ஊற வைத்துக் காலை, மாலை தினமும் உண்டுவந்தால் பலன் கிடைக்கும். நெல்லி கிடைக்காத காலங்களில் லேகியம், ஜாம், வற்றல் செய்து பயன்படுத்தினாலும் அவையும் நன்மை தரும். அரு நெல்லிக்கனி குளிர்ச்சி தரும். பித்தத்தைச் சமன்படுத்தும், காயை அரைத்து மோரில் கலக்கி குடித்தால் மஞ்சள்காமாலைநோய் குணமாகும். கரு நெல்லி என்ற வகை அபூர்வமானது. நெடுநாள் வாழ வைக்கும் தாதுப்பொருட்கள் இதில் உண்டு.

No comments:

Post a Comment