Showing posts with label kidney. Show all posts
Showing posts with label kidney. Show all posts

Wednesday, June 5, 2013

யானை வணங்கியும்,பூனை வணங்கியும்


நான் இப்போது சொல்லப் போவது இரண்டு மூலிகைகளைப் பற்றியது.முதலில் யானை வணங்கியைப் பற்றிப் பார்ப்போம்.
யானை வணங்கி என்பது யானை நெருஞ்சில் என்றழைக்கப்படும் பெருநெருஞ்சில்தான்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்பாடு,பெரும்பாடு என்னும் கடும் உதிரப்போக்கு,சிறுநீரகக் கல்(URINARY COLIC),சிறுநீரகக் கோளாறுகள்(NEPHRITIS),சிறுநீரக வடிகட்டும் வலை அமைப்பு பூராவும் அடைத்துக் கொள்ளும் நிலையில் சிறுநீரகம் சுருங்கிவிடும்,தண்ணீர் நிறைந்து கிடக்க வேண்டிய சிறுநீரகம் கருவாடு போல வற்றிச் சுருங்கும் நிலையே KIDNEY FAILURE, இரத்தத்தில் யூரிக் அமில அதிகரிப்பால் மூட்டுகளில் ஏற்படும் எலும்புத் தேய்மானம்,இவற்றை அடியோடு துடைத்தெரியும் வல்லமை உள்ளது.

இதையும் பாருங்கள்

யானைகள் கோடைக்காலத்தில் நீர்ப் பற்றாக் குறையால் சரியாகத் தண்ணீர் குடிக்க இயலாததால் யானைகளுக்கு கடும் நீரெரிச்சலும்,கடும் நீர்க்கடுப்பும் வரும்.அப்போது யானைகள் இந்த பெருநெரிஞ்சிலை
தின்று தங்கள் நீர்க்கடுப்பும்,நீரெரிச்சலும் நீங்கி இதை வணங்கிச் செல்வதால் இதற்கு யானை வணங்கி என்றும்,யானை நெருஞ்சில் என்றும் பெயர்.மிருகங்களுக்கு இருக்கும் அறிவு மனிதனுக்கு இல்லையே!

யானை நெருஞ்சிலை காலையில் பழைய சோற்று நீராகாரத்தில் போட்டு அசைத்துக் கொண்டிருந்தால்,சற்று நேரத்தில் நீராகாரம் கஞ்சி போலாகும்.யானை நெருஞ்சிலை எடுத்து வெளியே போட்டுவிட்டு வெறும் அந்த நீராகாரத்தை மட்டும் மூன்று நாள் மட்டும் பருகி வந்தால்,மேலே சொன்ன பிணிகள் அகலும்.

அடுத்து பூனை வணங்கி என்பது குப்பை மேனி என்ற செடிதான்.இதை கசக்கி பூனை அருகில் போட்டால்,பூனை கண்ணை மூடிக் கொண்டு முன்கால்கள் இரண்டையும் கண்களின் மேல் வைத்துக் கொள்ளும்.

ஏனெனில் குப்பை மேனியில் உள்ள கந்தகச் சத்து பூனையின் கண்களுக்கு எரிச்சலைக் கொடுப்பதால் இது அவ்வாறு செய்கிறது.மேலும் இதை எலி போன்ற ஆரோக்கிய குறைவான உணவை உண்டால் அதனால் உண்டாகின்ற நஞ்சு நீங்க பூனை இரவில் சென்று உண்ணும்.அப்போதுதான் பனியால் குப்பை மேனியின் கந்தக வீரியம் குறைந்திருக்கும்.பின் குப்பை மேனியை பூனை வணங்கிச் செல்லும்.எனவேதான் இதற்கு பூனை வணங்கி என்று பெயரிடப்பட்டது.

இதன் வேறு பெயர்கள் அரிமஞ்சரி, அண்டகம், அக்கினிச் சிவன்,பூனை வணங்கி,அனந்தம்,கோழிப் பூண்டு சங்கர புஷ்பி,மேனி
 
குப்பை மேனி 
குப்பை போன்ற போன்ற மேனியையும் பொன்மேனியாக்கும்.எனவே இதன் பெயர் குப்பை மேனி.உப்பையும் குப்பை மேனிச் சாற்றையும் கலந்து,சிறு குழந்தைகளுக்கு வரும் சிரங்கு முதலான வியாதிகளுக்கு மேற்பூச்சாக பூசி வெயிலில் நிற்க வைக்க கொஞ்சம் எரிச்சல் எடுக்கும்.மூன்று நாட்களில் அத்தனை சிரங்கும் கருகி உதிரும்.

ஒரு முறை ஒரு ஆறு மாத குழந்தையை என்னிடம் தூக்கி வந்தார்கள்.அந்தக் குழந்தையின் நுரையீரல் எல்லாம் சளி நிறைந்து இருக்கும் X-RAY படத்துடன் வந்தார்கள்.இந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் 30 நாட்கள் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர் கூறினார்.பணம் ரூ25,000/= எடுத்து வரச் சொல்லி இருக்கிறார்கள் என்றார்கள்.

நான் குப்பைமேனிச் சாற்றை உப்புடன் வைத்துக் கசக்கி 4 சொட்டுகள் மட்டும் எடுத்து,அந்தக் குழந்தைக்கு கொடுக்க 3 நிமிடங்களில் அத்தனை சளியையும் வாந்தியாக எடுத்துவிட்டது. பொதுவாகவே,பெரியவர்,சிறியவர் என்ற பேதமில்லாமல்,X-RAY படம் அதிகம் எடுக்கக் கூடாது.அதிலும் சிறு குழந்தைக்கு சில தடவைகள் கூட எடுக்காதீர்கள்,அது இரத்தச் சிவப்பணுக்களை கொல்லும்,என்று கூறி அனுப்பினேன்.

மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஒரு X-RAY எடுத்துப் பார்த்தோம்.நீங்கள் கூறியது போல சளி குறைந்திருக்கிறதா? என்று பார்த்தோம்.படத்தில் குறைந்துவிட்டது என்று தெரிந்து கொண்டோம்.மிக்க நன்றி என்றார்கள்.நான்தான் X-RAY எடுக்க வேண்டாம் என்றேனே? அவர்கள் சரியானதை உறுதிப்படுத்த எடுத்ததாகக் கூறினார்கள்.மக்களின் அறியாமையை எண்ணி எனக்குள் நொந்து கொண்டு அவர்களை அனுப்பி வைத்தேன்.
  
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்   

Tuesday, January 22, 2013

அக்கு பஞ்சர்


அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம்8

அக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை  அக்கு பஞ்சரைப் (PRACTICAL ACUPUNCTURE) பார்ப்பதில் உள்ளது. அவற்றையே இங்கு நான் விளக்கி வருகிறேன்.


அக்கு பஞ்சர் என்றால் ஊசியைக் குத்தி வைத்தியம் பார்ப்பது மட்டுமல்ல.வியாதியின் அடிப்படையை களையும், அவற்றைக் களையும் பழக்க வழக்கங்கள், உணவுகள் இவற்றையும் நம் சித்தர்களின் சித்த வைத்தியம் போலவே கூறுகிறது.(போகர்தான் இந்தியாவிலிருந்து சீனாவிற்குப் போய் இது போன்ற விடயங்களை அங்கே கற்றுக் கொடுத்தார் என்று கூறுகிறது சரித்திரம் எனவே இதுவும் சித்தர் விஞ்ஞானமே.)


அந்தக் காரணங்களை சித்த வைத்தியத்திலும், பழந்தமிழர் வாழ்வியலிலும் சரியாக விளக்கிக் கூறாறததால் பலவற்றை நானே மூட நம்பிக்கை என்று ஒரு காலத்தில் நினைத்திருக்கிறேன்.


பிறகு காரணங்கள் விளங்க விளங்க, பின் எந்த பழந்தமிழர் வாழ்வியலில் உள்ள விடயங்களைக் கண்டால் அதிலும் எந்தக் கருத்து உள்ளது என்பதை அலசி ஆராய்ந்து பார்க்கத் துவங்கி, நான் கண்டறிந்ததையே இங்கு பதிவுகளாக பதிந்து வருகிறேன்.


நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)(கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி),சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது.இதை வாத நோய்கள் என்பார்கள்.


பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.


அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக 
அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXIGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.


பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும்(முன்பே சரநூலில் கூறியிருக்கிறேன் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.


அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.


சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.


இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.


விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.


மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது.


இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



இப்போதுதான் பதிவிடப்பட்டுள்ள சித்தர் விஞ்ஞானம் பாகம் 4 ன் இணைப்பு இதோ.அது வெகு காலமாக கோழி முட்டையை அடைகாப்பது போல் காத்து இன்று வெளி வந்திருக்கிறது.அது பழந்தமிழரின் கால அளவைகள்.பார்த்து இன்புறுங்கள்.தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.எனென்றால் இது நான் மிகவும் யோசித்து இட்ட பதிவு.


http://machamuni.blogspot.com/2010/12/3.html


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்